செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்றவர் கைது
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் மார்க்கெட் சாலையில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற கோ-ஆப்ரேட்டிவ் காலனியைச் சேர்ந்த பிரபு பிரசாந்த் (வயது 24) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.