செய்திகள்
கைது

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-06-17 10:00 GMT   |   Update On 2020-06-17 10:00 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கணவரை பிரிந்து தாய் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியைச்சேர்ந்த செல்வராஜ் (எ)பிரபா (வயது 26) என்பவர் இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து உள்ளார்.

உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக்கூறி கையை பிடித்து இழுத்ததாகவும், தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இது குறித்து அந்த இளம்பெண் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் அந்தப்புகாரின் பேரில் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி நேற்று முன்தினம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதைதொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த செல்வராஜ் (எ)பிரபாவை கைது செய்தனர். பின்னர் அவர் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News