செய்திகள்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை

சென்னையில் கொரோனாவுக்கு இன்று 9 பேர் உயிரிழப்பு

Published On 2020-06-13 09:37 GMT   |   Update On 2020-06-13 09:37 GMT
சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,698 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 22,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 367-ஆக அதிகரித்துள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளது. 14,723 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 294-ஆக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 77 வயது முதியவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 
Tags:    

Similar News