செய்திகள்
தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு உள்ள இடங்கள்- வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுவையில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள் குறித்த தகவலை பார்ப்போம்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை, வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.