search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Southwest Monsoon"

    • தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கியதும், தமிழ்நாட்டுக்கு அதிகளவு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்கும்.
    • தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் நிறைவு பெறும். அந்தவகையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை விலகுவதற்கான சூழல் நிலவி வருகிறது.

    அதன்படி, இன்னும் ஓரிரு நாட்களில் தெலுங்கானா, மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை விலகும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதனை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை விலகத் தொடங்கியதும், தமிழ்நாட்டுக்கு அதிகளவு மழை தரக்கூடிய வடகிழக்கு பருவமழை தொடங்கும். அந்தவகையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை வருகிற 23-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 25-ந்தேதிக்குள் (புதன்கிழமை) தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையில் தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    அதிலும் இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (புதன்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது.
    • வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீசத்தொடங்கும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 18-ந்தேதி வாக்கில் தொடங்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 10 நாட்கள் தாமதமாக இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யும். இந்த ஆண்டு சராசரி அளவை விட அதிகமாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதகமாக தொடங்குவதற்கு சில காரணங்கள் உள்ளன. தென்மேற்கு பருவமழை இன்னும் முடிவடையாததே வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

    தமிழகத்தின் சில பகுதிகள் மற்றும் கர்நாடகாவின் தெற்கு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இன்னும் பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை வருகிற 15-ந்தேதி முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வடகிழக்கு திசையை நோக்கி காற்று வீசத்தொடங்கும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கும். காற்றின் திசையானது இந்த மாதம் கடைசி வாரத்தில் மாற வாய்ப்புள்ளது. எனவே இந்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும்.

    1984-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் முன்னதாகவே அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கியது. 1988, 1992, 2000 ஆகிய ஆண்டுகளில் மிகவும் தாமதமாக நவம்பர் 2-ந்தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை.
    • சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன.

    சேலம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவமழை அதிக அளவிலும், அதே போல கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டம் 2 பருவமழைகளும் அதிக அளவில் பெய்யும் சிறப்பு வாய்ந்த மாவட்டமாக உள்ளது.

    அதன்படி தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை பெய்யும், நடப்பாண்டில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பெய்துள்ளது.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சராசரி அளவாக 406.4 மி.மீ. பெய்யும், ஆனால் இந்த ஆண்டு 380.4 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 26 மி.மீ. மழை குறைவாக பெய்துள்ளது. இது ஆண்டு சராசரி மழை அளவை விட 6 சதவீதம் குறைவாகும்.

    தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும் இன்னும் மழை காலம் முழுவதும் நிறைவு பெறவில்லை. இதனால் இன்னும் சில நாட்கள் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரி மற்றும் குளங்கள் உள்ளன. இதில் பெரிய ஏரிகளில் டேனீஸ்பேட்டை ஏரி, எடப்பாடி பெரிய ஏரி உள்பட சில ஏரிகள் மட்டுமே நிரம்பி உள்ளன. மேலும் பல ஏரிகள் பாதியளவும், ஒரு சில ஏரிகள் தண்ணீர் இல்லாமலும் காட்சி அளிக்கின்றன. இதனால் சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட நிலத்தடி நீர்மட்டம் குறைவாக உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பில்லை.
    • அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வகுப்புகளுக்கு சென்றனர்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு சில மாவட்டங்களில் பெய்து வருகிறது. சென்னை மற்றும் சுற்றுப்பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் இரவில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் உஷ்ணத்தில் இருந்து தப்பித்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் இருந்து சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதியில் மழை பெய்தது. வானம் இருள் சூழ்ந்து காணப்பட்டதோடு ஒரு சில இடங்களில் கனமழையாகவும் பெய்தது.

    இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் மழை விட்டு விட்டு பெய்ததால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படுவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுத்தது.

    ஆனால் காலை 7.30 மணி முதல் பல இடங்களில் மழை வெளுத்து வாங்கியது. மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வேன், பஸ்களில் புறப்பட்டு சென்ற நேரத்தில் மழை பெய்ததால் மிகவும் சிரமப்பட்டனர்.

    தற்போது காலாண்டு தேர்வு நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்பில்லை. அரசு, தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி வகுப்புகளுக்கு சென்றனர்.

    இதேபோல் கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் கொட்டும் மழையிலும் நனைந்தபடி சென்றனர்.

    எழும்பூர், கோயம்பேடு, அண்ணாநகர், அம்பத்தூர், மாதவரம், பெரம்பூர், மூலக்கடை, வடபழனி, மயிலாப்பூர், மடிப்பாக்கம், அடையாறு, வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

    புறநகர் பகுதியிலும் காலை முதல் மழை பெய்தது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு விழுப்புரம், கிருஷ்ணகிரி, மாவட்டங்களில் லேசான மழை பெய்தது.

    இதற்கிடையில் இன்றும், நாளையும் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
    • தென்மேற்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது.

    ஏற்காடு:

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள் உள்ளன.

    இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏரி, பூங்கா என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

    இன்று சனிக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கையில் ஏற்காட்டில் குவிந்தனர். இதனால் ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, சேர்வராயன் குகை கோவில், பக்கோடா பாயிண்ட் , லேடிஸ்சீட், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்து மகிழ்ந்தனர்.

    படகு இல்லத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.

    தென்மேற்கு பருவமழையையொட்டி ஏற்காட்டில் கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷண நிலை மிகவும் குளுமையாக மாறியுள்ளது.

    மேலும் மழை பொழிவு அதிகமாக இருப்பதால் இங்குள்ள கிணறு, கால்வாய், ஓடை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்ப தொடங்கி உள்ளது.

    குறிப்பாக கடந்த 8 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட ஏற்காடு கிளியூர் நீர்வீழ்ச்சி இந்த மழை பொழிவினால் நீர்வரத்து அதிகரித்து வெள்ளி போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    ஏற்காடு ஏரியில் இருந்து 2.5 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டு உற்சாகமாக நீராடி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் சாலையோர கடைகள், தள்ளுவண்டி கடைகளில் வியாபாரம் களை கட்டியது.

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்று மாலை 4.45 மணியளவில் தொடங்கிய மழை 45 நிமிடங்கள் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மழையை தொடர்ந்து நேற்றும் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ன நிலை நிலவியது. இன்று காலை ஏற்காட்டில் வெயில் அடித்தபடி இருந்தது. சனிக்கிழயைான இன்று காலை முதலே ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்தனர்.

    சேலம் மாவட்ட புறநகர் பகுதிகளான கரியகோவில், பெத்தநாயக்கன்பாளையம், ஆனைமடுவு உள்பட பல பகுதிகளிலும் நேற்று சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஏற்காட்டில் 11.20 மி.மீ. மழை பெய்துள்ளது. கரியகோவில் 7, பெத்தநாயக்கன்பாளையம் 5, ஆனைமடுவு 4, எடப்பாடி 2, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 30.20 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது
    • ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை வழக்கமாக 174.6 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சரியான நேரத்தில் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. மேலும் வழக்கத்தை விட மிக குறைவான அளவே மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சராசரியாக 42.6 சென்டி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 6 சென்டி மீட்டர் மழையே பெய்துள்ளது. இது 86 சதவீதம் பற்றாக்குறையாகும்.

    ஜூன் 1-ந்தேதி முதல் ஆகஸ்ட் 31-ந்தேதி வரை வழக்கமாக 174.6 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 91.16 சென்டி மீட்டர் மழையே பெய்திருக்கிறது. பருவமழை காலத்தில் மழை மிகவும் குறைவாக பெய்துள்ளதால் வறட்சி நோக்கி கேரள மாநிலம் செல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் நீரை சேமிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும்.
    • பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிவிட்டதால் நிலத்தடி நீர் மட்டம் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜனவரி - பிப்ரவரி மாதங்களை உள்ளடக்கிய குளிர் பருவத்தில் 14 மி.மீ., அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஜனவரி மாதம் மழை பதிவாகவில்லை. பிப்ரவரி மாதம் மட்டும் 7.75 மி.மீ., அளவுக்கு மட்டும் மழை பதிவாகியுள்ளது.

    மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களை உள்ளடக்கிய கோடை பருவத்தில் 135.10 மி.மீ., என்ற இயல்பான அளவை காட்டிலும் அதிக மழை பெய்தது. மார்ச் மாதம் 27.34 மி.மீ., - ஏப்ரல் மாதம் 23.53 மி.மீ., - மே மாதம், 105.17 மி.மீ., என 156.04 மி.மீ., அளவுக்கு மழை பதிவானது.

    ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான தென்மேற்கு பருவத்தில் கடந்த 2 மாதங்களில் மழை ஏமாற்றி விட்டது. இம்மாதமும் பருவமழை போக்கு காட்டி க்கொண்டிருக்கிறது. ஜூன் மாதம் 22 மி.மீ., அளவுக்கு பதிவாக வேண்டிய மழை 14.73 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது.

    ஜூலையில் 27.10 மி.மீ., அளவுக்கு இருக்க வேண்டிய மழை 12.76 மி.மீ., மட்டுமே பதிவாகியுள்ளது. இம்மாத (ஆகஸ்டு) மாதத்தின் இயல்பான மழை அளவு 31.70 மி.மீ., ஆனால் நேற்று மாலை வரை 6.24 மி.மீ., அளவுக்கு மட்டும் பதிவாகியுள்ளது.

    ஜூன் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக மழையளவு குறைந்ததால் வறட்சி மெதுவாக தலைகாட்ட துவங்கி விட்டது. கோடை பருவம் விடைபெற்று 3 மாதமாகியும், வெப்பத்தாக்கம் குறையாமல் கொளுத்தி க்கொண்டிருக்கிறது. பகல் நேரத்தில் அக்னி நட்சத்திர வெயில் போல வெப்ப தாக்கம் அதிகரித்துள்ளது.

    இருப்பினும் இப்படியே மழை தலைகாட்டாமல் இருந்தால், வறட்சியின் பிடியில் சிக்க வேண்டியிருக்கும். கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகள் வறட்சியை நெருங்கிவிட்டன. ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக கடந்த ஆண்டில் 45 மி.மீ., மழை பதிவானது. இந்தாண்டு 30 மி.மீ., மழை குறைந்துபோனது.

    ஜூலையில் அதிகபட்ச அளவாக கடந்தாண்டு 68.77 மி.மீ., பதிவாகியிருந்தது. இந்தாண்டு 12.75 மி.மீ., மட்டுமே பெய்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2017ம் ஆண்டு மழை அளவு வெகுவாக குறைந்து போயிருந்தது.அடுத்தபடியாக இந்தாண்டு தென்மேற்கு பருவத்தில் மழை அளவு குறைந்து போயுள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கோடை மழை வழக்கம் போல் பொய்த்துவிட்டது.தென்மேற்கு பருவமழை இந்தாண்டு ஏமாற்றிவிட்டது. இப்பருவ மழை நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு மிக முக்கியமானது. தென்மேற்கில் மண்ணில் ஈரத்தன்மை ஏற்பட்ட பின்னரே வடகிழக்கு பருவத்தில் நிலத்தடி நீர் உயரும். இதேநிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் மட்டம் சரிவது மட்டுமல்ல, கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாமல் போகும் ஆபத்தும் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நேற்றும் பகலில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென வானில் மேகமூட்டங்கள் ஏற்பட்டது.
    • நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடியாக இருந்தது.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்த்துப்போன நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறட்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் அளவிற்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கடுமையான வெயிலில் இருந்து தப்பிக்க முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். மேலும் கடந்த சில வாரங்களாகவே 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிப்பதால், பெண்கள் குடை பிடித்தபடி சாலைகளில் செல்வதை காண முடிகிறது.

    நேற்றும் பகலில் கடுமையான வெயில் வாட்டிய நிலையில், மதியத்திற்கு பிறகு திடீரென வானில் மேகமூட்டங்கள் ஏற்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசியது. மாலையில் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக சந்திப்பு, டவுன், கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் சுமார் அரைமணி நேரம் கனமழை கொட்டியது.

    இதனால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கியது. சந்திப்பு பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதில் பஸ்கள் ஊர்ந்தபடி சென்றன. பேட்டை பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்று காலை நிலவரப்படி நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக நெல்லையில் 20.6 மில்லிமீட்டரும், பாளையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அரைமணி நேரம் பெய்த மழைக்கு கூட தாக்குப்பிடிக்க முடியாமல் சந்திப்பு பஸ் நிலையத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    அதே நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நாலுமுக்கு, ஊத்து பகுதிகளிலும் நேற்று மாலையில் திடீரென மழை பெய்தது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. ஊத்து எஸ்டேட்டில் 5 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசத்தின் நீர்மட்டம் கடந்த ஆண்டு இதே நாளில் 103 அடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழை இல்லாததால் 50 அடிக்கும் கீழாக தண்ணீர் இருப்பு குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அணையில் 48.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. மொத்தம் 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 15 அடி வரை சேறும், சகதியும் மட்டுமே இருக்கும் என்பதால் நீர்மட்டம் 30 அடி வரையில் மட்டுமே நீர் உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

    அதேபோல் 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 41.45 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறு அணையில் 62.43 அடியும், நம்பியாறு அணையில் 12.49 அடியும் நீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து வெயில் அடித்து வருவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 2 மாதங்கள் இருப்பதாலும் குடிநீர் தேவையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது லேசான காற்று வீசி வரும் நிலையில், நேற்று ஒரு சில இடங்களில் மாலையில் குளிர்ந்த காற்று வீசியது. கோவில்பட்டி, கயத்தாறு, கடம்பூர் பகுதிகளில் மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன.

    அதனை தொடர்ந்து திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. கடம்பூரில் சுமார் 1 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவில்பட்டியிலும் பெய்த பலத்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக கடம்பூரில் 44 மில்லிமீட்டரும், கோவில்பட்டியில் 16.8 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

    • திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.
    • திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மிதமாக பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை கனமழை பெய்தது.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு விவரம் வருமாறு:

    இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 7.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திருவள்ளூர் - 72 மி.மீட்டர்

    ஜமீன் கொரட்டூர் - 67 மி.மீட்டர்

    திருவலாங்காடு - 54 மி.மீட்டர்

    திருத்தணி - 48 மி.மீட்டர்

    பூந்தமல்லி - 41 மி.மீட்டர்

    பொன்னேரி - 38 மி.மீட்டர்

    சோழவரம் - 36 மி.மீட்டர்

    பூண்டி - 35 மி.மீட்டர்

    ஆவடி - 32 மி.மீட்டர்

    செங்குன்றம் - 30 மி.மீட்டர்

    தாமரைப்பாக்கம் - 29 மி.மீட்டர்

    கும்மிடிப்பூண்டி - 17 மி.மீட்டர்

    ஊத்துக்கோட்டை - 14 மி.மீட்டர்

    பள்ளிப்பட்டு - 8 மி.மீட்டர்

    ஆர்.கே. பேட்டை - 4 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும்.
    • பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது. அப்போது அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. சில மாவட்டங்களில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    ஆனால் பருவமழை சில வாரங்களே நீடித்தது. அதன்பிறகு மழை பெய்யவில்லை. இதனால் வழக்கத்தை விட அங்கு வெயில் அதிகமாக அடித்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் இன்றும், நாளையும் அதிக வெப்ப நிலை நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    கேரள மாநிலத்தில் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் என்றும், 9 மாவட்டங்களில் 34 முதல் 36 டிகிரி வரை வெயில் சுட்டெரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்தில் 36 டிகிரி செல்சியசும், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பாலக்காட்டில் 35 டிகிரி செல்சியசும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 34 டிகரி செல்சியசும் வெப்பம் பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதிகரிக்கும் வெப்ப நிலையை கருத்தில் கொண்டு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை அறிவுறுத்தல்களையும் வெளியிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:-

    காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளி உடலில் நேரடியாக படுவதை தவிர்க்க வேண்டும், நீரிழப்பை தடுக்க கையில் குடிநீர் பாட்டில் வைத்திருக்க வேண்டும், தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

    பகலில் மது, காபி, டீ மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட பானங்கள் உள்ளிட்டவைகளை குடிப்பதை தவிர்க்க வேண்டும், வெளியில் செல்லும்போது தளர்வான மற்றும் வெளிர் நிற ஆடைகள் அணிய வேண்டும், குடை அல்லது தொப்பி பயன்படுத்துவது நல்லது.

    மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பள்ளி அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை உடலில் சூரிய ஒளி படுவதை தவிர்க்க வேண்டும்.

    காட்டுத்தீயை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும், பொதுமக்கள் இந்த காலக்கட்டத்தில் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவை உள்ளிட்ட மேலும் பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    • வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.
    • சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்னிந்தியாவின் ஸ்பா என அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டி காணப்படும்.

    குற்றாலத்தில் அமைந்துள்ள பிரதான அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தென்மேற்கு பருவமழை பொழியும் காலங்களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கி அடர்ந்த வனப்பகுதியின் இடையே வரும் அருவி நீரானது வனப்பகுதியில் இருக்கும் மூலிகை செடிகள் மரங்களை கடந்து வருவதால் மூலிகை நிறைந்த குறிப்பாக பிணிகளை நீக்கும் மருத்துவ குணம் கொண்ட ஒரு பொருளாக குற்றால அருவிகள் பார்க்கப்பட்டு வருகிறது.

    இதில் குளிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா என இந்தியா முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து ஆனந்த குளியல் போடுவர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகு நிறைந்ததாக காணப்படுகிறது.

    ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழையானது இந்த ஆண்டு போதிய அளவில் பெய்யவில்லை. சீசன் தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த 2 மாதங்களில் அவ்வப்போது மட்டும் மழை பெய்து கண்ணாமூச்சி காட்டுகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் போதிய நீரோட்டம் இன்றி பாறையாக காட்சியளிக்கிறது. இதனால் கடந்த ஆண்டு குற்றால அருவியில் குளித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை விட இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது பல மடங்கு குறைந்தது.

    குற்றாலத்தில் முழுமையாக சீசன் இல்லாததால் சீசனை எதிர்பார்த்து அமைக்கப்பட்டு இருந்த வியாபார நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், வாடகை வாகனங்கள் என சுற்றுலா துறையை நம்பியே லட்சக்கணக்கான பணம் முதலீடு செய்தவர்கள் பலரும் போதிய வருமானமின்றி புலம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    மலைவாசல் தளங்களில் கிடைக்கும் பழ வகைகள் அனைத்தையும் சீசன் காலங்களில் குற்றாலம் வரும் பயணிகளின் கண் முன்னே காண்பித்து அவர்களை ருசிக்க வைக்க நினைத்த வியாபாரிகளின் நிலையும் பரிதாபமாக உள்ளது.

    சீசன் முழுமையாக இல்லாததால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து அரசுக்கு வருமான இழப்பும் ஏற்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெப்ப அளவு மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
    • நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தென்மேற்கு பருவமழையின் தீவிரம் கேரளம், கா்நாடகத்தில் குறைந்துள்ளது. மேலும், கடல் காற்று திசை மாற்றம் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பத்தின் தாக்கம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெப்பம் நீடிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வெப்ப அளவு மேலும் 3 அல்லது 4 நாட்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நாளை 4 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பம் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் நேற்று 17 இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட் அளவை விட அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக மதுரையில் 106.88 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது.

    ×