என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்...
    X

    காலை 10 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்...

    • சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, தேனி, தென்காசி, கோவை, நெல்லை ஆகிய 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×