என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
    X

    11 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

    • சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது.
    • சென்னையில் சில இடங்களில் நேற்று மழை பெய்தது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 28-ந் தேதி வரை தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளை தவிர பிற பகுதிகளில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்து வருகிறது.

    அதிலும் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை காலத்தில்கூட இந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் இல்லாத நிலையில், இம்மாதம் தொடக்கத்தில் இருந்து கொளுத்துகிறது. இடையில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்து ஓரளவுக்கு வெப்பத்தை குறைக்கிறது.

    அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் வெப்பத்தின் அளவு இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்பட்டது. பகலில் உஷ்ணத்தால் அசவுகரியத்தை உணர முடிந்தது. நேற்று அதற்கு ஒரு இடைவெளி கொடுக்கும் வகையில் இரவில் சென்னையில் சில இடங்களில் மழை பெய்தது. அதிலும், இடி, மின்னல், காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக சுட்டெரித்த வெயிலுக்கு மத்தியில் இதமான சூழலை மழை ஏற்படுத்தியதால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் 11 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    Next Story
    ×