செய்திகள்
பள்ளேரி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவர் கைது
பள்ளேரி அருகே மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட்(ராணிப்பேட்டை):
கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 29). இவர், நேற்று முன்தினம் பொன்னையாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை கடத்தி கொண்டு வந்தார். பள்ளேரியை அடுத்த சுடுகாடு அருகே வரும்போது, அங்கு ரோந்துப்பணியில் ஈடுபட்ட சிப்காட் போலீசார் மணல் கடத்திய அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.