செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிள் மீது சரக்குவேன் மோதல்- வாலிபர் பலி

Published On 2020-06-06 12:32 GMT   |   Update On 2020-06-06 12:32 GMT
கெலமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்குவேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள கிறிஸ்து பாளையத்தை சேர்ந்தவர் ஆரூன் டென்னிஸ்குமார் (வயது 28). இவர் மோட்டார்சைக்கிளில் தேன்கனிக்கோட்டை-ஓசூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். மாசிநாயக்கனப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் சென்ற போது ஓசூர்-தேன்கனிக்கோட்டை நோக்கி சென்ற சரக்கு வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஆரூன் டென்னிஸ்குமார் இறந்தார்.

அப்போது சரக்கு வேனின் பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்த சுரேஷ் என்ற வாலிபரும் வேன் மீது மோதினார். இதில் அவரும் காயம் அடைந்து சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News