செய்திகள்
தொழிலாளி மரணம்

குலசேகரம் அருகே தோட்ட தொழிலாளி மர்ம மரணம்

Published On 2020-06-06 08:17 GMT   |   Update On 2020-06-06 08:17 GMT
குலசேகரம் அருகே தோட்ட தொழிலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவட்டார்:

குலசேகரத்தை அடுத்த மணியங்குழி, வலியமலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 35).

இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். சுரேஷ் குமார் மலைகிராமத்தில் உள்ள தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றார். அன்று மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மனைவியும், குழந்தைகளும் அவரை தேடினர். எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து நேற்று காலையில் கணவரை தேடி அவரது மனைவி மலைகிராமத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் உள்ள 10 அடி ஆழ குழியில் சுரேஷ் குமார் பிணமாக கிடந்தார்.

இதை கண்ட அவரது மனைவி கதறி அழுதார். மேலும் இது பற்றி குலசேகரம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசார் சுரேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சுரேஷ் குமார் எப்படி இறந்தார்? அவரது சாவில் மர்மம் உள்ளதா? என்பது பற்றி குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News