செய்திகள்
கைது

வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவர் கைது

Published On 2020-06-05 08:58 GMT   |   Update On 2020-06-05 08:58 GMT
வேலாயுதம்பாளையம் அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்யல்:

வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் தலைமையிலான போலீசார் புகளூர் தேசிய நெடுஞ்சாலை நான்கு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியில் மது விற்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டம், செம்மனூரை சேர்ந்த முத்தழகு (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News