செய்திகள்
சிறுவன் பலி

கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2020-06-05 06:48 GMT   |   Update On 2020-06-05 06:48 GMT
உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே எறையூர் சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவருடைய மகன் பால்ராஜ் . இவன் தனது நண்பர்களுடன் பாளையகுஞ்சரம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் நீச்சல் பயிற்சி செய்து கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக அவன் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தான். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News