செய்திகள்
திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்- தொழிலாளி கைது
மதுரை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் கட்டிட தொழிலாளியை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை அடுத் துள்ள கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது22). கட்டிட தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண் சமயநல்லூர் போலீ சில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், வேல்முருகன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் கீழக்குயில்குடியை அடுத் துள்ள கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது22). கட்டிட தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அந்த பெண் சமயநல்லூர் போலீ சில் புகார் கொடுத்துள்ளார்.
அதில், வேல்முருகன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுத்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை கைது செய்தனர்.