செய்திகள்
விபத்து பலி

தரகம்பட்டி அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

Published On 2020-06-03 09:05 GMT   |   Update On 2020-06-03 09:05 GMT
தரகம்பட்டி அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறி த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தரகம்பட்டி:

கரூர் மாவட்டம், மாமரத்துப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் தங்கவேல் (வயது 29). இவர், சொந்த வேலையாக வெளியில் சென்று விட்டு நேற்று முன்தினம் தரகம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். தரகம்பட்டி தாலுகா அலுவலகம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த சரக்கு வேனும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில், தலையில் பலத்த காயம் அடைந்த தங்கவேல் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சிந்தாமணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News