செய்திகள்
கைது

திருப்பூரில் தடையை மீறி பிரார்த்தனை நடத்திய பாதிரியார் உள்பட 7 பேர் கைது

Published On 2020-06-02 12:43 GMT   |   Update On 2020-06-02 12:43 GMT
திருப்பூரில் தடையை மீறி பிரார்த்தனை நடத்திய பாதிரியார் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் அவினாசி ரோடு குமார் நகரில் உள்ள சி.எஸ்.ஐ. சர்ச்சில் ஏராளமானவர்கள் கூடி தடையை மீறி பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது தடையை மீறி பிரார்த்தனையில் ஈடுபட்ட அவினாசி ரோட்டை சேர்ந்த பாதிரியார் வில்சன்குமார் (47), குமரன் ரோட்டை சேர்ந்த வில்சன் (47), ரெயில்வே பீட்டர் ரோடு பகுதியை சேர்ந்த மனோ (51), அவிநாசி ரோட்டை சேர்ந்த செல்வகுமார் (45),புதுநகர் காலனியை சேர்ந்த பிரேம்குமார் (44), காலேஜ் ரோட்டை சேர்ந்த குணசேகர் (60), ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்த டேவிட் ஜேசுபாலன் (54) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News