செய்திகள்
கைது

குடும்பத்தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர் கைது

Published On 2020-06-01 14:11 GMT   |   Update On 2020-06-01 14:11 GMT
பேராவூரணி அருகே குடும்பத்தகராறில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
பேராவூரணி:

பேராவூரணி அருகே குருவிக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் உதயசூரியன் (வயது 35). விவசாய தொழிலாளி. இவரது மனைவி சசிகலா (33). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தைபேறு இல்லாததால் கணவன் மனைவிக்கு இடையே இதுதொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் கணவன், மனைவிக்கு இடையே குழந்தை பிரச்சனை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த உதயசூரியன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி சசிகலாவை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து சசிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து ஆவணம் பகுதியில் வசித்து வரும் சசிகலாவின் தாய் பானுமதி கொடுத்த புகாரின்பேரில் உதயசூரியனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News