செய்திகள்
விபத்து பலி

வெள்ளகோவில் அருகே விபத்தில் வியாபாரி பலி

Published On 2020-06-01 11:59 GMT   |   Update On 2020-06-01 11:59 GMT
வெள்ளகோவில் அருகே விபத்தில் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் நத்தமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (62). இவர் போண்டா, வடை, போன்ற எண்ணெய் பலகாரம் போட்டு டீ கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார். இவர் பலகாரம் சப்ளை செய்ய நேற்று காலை 10 மணிக்கு வெள்ளகோவில் முத்தூர் ரோட்டில் மொபட்டில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் செல்லும் போது எதிரில் வந்த பைக் இவர் மீது மோதியது.

இதனால் சுப்பிரமணியம் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு பரிசோதித்த டாக்டர், சுப்பிரமணியம் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து வெள்ளகோவில் (பொறுப்பு) போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா , சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News