செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 29 பேர் கைது

Published On 2020-06-01 11:24 GMT   |   Update On 2020-06-01 11:24 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.19,400 மற்றும் 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் பெல்லட்டி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த சக்காரலப்பன் (வயது 32), நாகராஜ்(28), எல்லப்பா (38), ஜெய்குமார் (40), அஜீத் (21), கிருஷ்ணன் (45), நாகராஜ் (24), ராமமூர்த்தி (40), பழனி (26), மூர்த்தி (24), வெங்கடேஷ் (24), மணி (47), புட்ராஜ் (38) ஆகிய 13 பேரை கைது செய்தனர்.

இதேபோன்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் பாத்தகோட்டா பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஜெகதீசன் (29), மஞ்சுநாத் (21), பரமேஸ்(19) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மத்திகிரி கால்நடை பண்ணை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ரபீக்(36), அபீத்(60), சுரேஷ்(32), ரபி(27), மசூத்(32), அம்ஜத்கான்(38) ஆகிய 6 பேரையும் மத்திகிரி போலீசார் கைது செய்தனர்.

ஓசூர் டவுன் போலீசார் காரப்பள்ளி பப்ளிக் ஸ்கூல் பின்புறம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஹரீஸ்(27), தங்கமணி(30), பவன்குமார்(22), சுனில்குமார்(28) மற்றும் காரப்பள்ளி ஏரிக்கரையில் சூதாடிய சுப்பிரமணி(48), சிவக்குமார்(38), வேணுகோபால்(34) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சூதாடிய 29 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.19 ஆயிரத்து 400 மற்றும் 12 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News