செய்திகள்
விபத்து பலி

குளித்தலை அருகே இன்று மினி டெம்போ புளியமரத்தில் மோதி டிரைவர் பலி

Published On 2020-06-01 10:58 GMT   |   Update On 2020-06-01 10:58 GMT
குளித்தலை அருகே இன்று மினி டெம்போ புளியமரத்தில் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு மினி டெம்போ நேற்று இரவு கரூர் மாவட்டம் குளித்தலை நோக்கி புறப்பட்டது. டெம்போவை குளித்தலைவாக்கம் பட்டி பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(வயது 22) என்பவர் ஓட்டி சென்றார். இந்த டெம்போ இன்று அதிகாலை 2.30 மணி அளவில் குளித்தலை பகுதியில் விபத்தில் சிக்கியது.

குளித்தலை-மணப்பாறை ரோட்டில் ஒத்தக்கடை பகுதியில் சென்ற போது டிரைவர் கட்டுப்பாட்டினை இழந்த டெம்போ சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் டெம்போவின் முன்பக்கம் நொறுங்கியது இடி பாடுகளுக்குள் சிக்கி டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து பற்றி அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News