செய்திகள்
மரணம்

தர்மபுரி அருகே இளம்பெண் திடீர் மரணம்

Published On 2020-05-29 10:55 GMT   |   Update On 2020-05-29 10:55 GMT
தர்மபுரி அருகே இளம்பெண் திடீர் மரணம் குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நல்லம்பள்ளி:

தர்மபுரி ஒட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீபா(வயது 27). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் சுவாச பிரச்சினை காரணமாக வீட்டில் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்திருப்பது தெரியவந்தது.

இளம்பெண் தீபாவின் திடீர் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News