செய்திகள்
கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

Published On 2020-05-29 10:42 GMT   |   Update On 2020-05-29 10:42 GMT
பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:

உத்தனப்பள்ளி போலீசார் ராமாபுரம் மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய சூளகிரி தம்மணப்பள்ளியைச் சேர்ந்த முனிராஜ் (வயது 20), சூளகுண்டா முனிராஜ் (20) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்யப்பட்டது.

கல்லாவி போலீசார் ஆனந்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ஆனந்தூரைச் சேர்ந்த மாது (48), தண்டபாணி (40), அண்ணாமலை (49), சங்கர் (35) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.40 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News