செய்திகள்
கைது

கோவை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது

Published On 2020-05-29 09:54 GMT   |   Update On 2020-05-29 09:54 GMT
கோவை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சவுரத்மணி(30). டாக்டர். இவரது வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த சினேகலதா(37), விஜயகுமார்(18), உள்பட 3 பேர் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இவரது வீட்டில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் காணாமல் போனது. மேலும் வீட்டில் வேலை பார்த்து வந்த 3 பேரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சவுரத்மணி இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் வீட்டில் வேலை பார்த்த 3 பேர் தான் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று நகையை திருடி சென்ற சினேகலதா உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சரவணன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News