செய்திகள்
கைது

சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

Published On 2020-05-29 09:50 GMT   |   Update On 2020-05-29 09:50 GMT
பழனியில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பழனி:

பழனி மதனபுரத்தைச் சேர்ந்த நாகராஜ் மகன் ஸ்ரீராம் (வயது 21). எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அவருடன் தனிமையில் பேசி வந்தார். இந்நிலையில் சிறுமி கர்ப்பிணி ஆனார். அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த அவரது பெற்றோர் இது குறித்து விசாரித்த போது நடந்த விபரங்களை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஸ்ரீராம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News