செய்திகள்
அரிசி

400 பேருக்கு நிவாரண பொருட்கள்- கலெக்டர் வழங்கினார்

Published On 2020-05-29 09:43 GMT   |   Update On 2020-05-29 09:43 GMT
செங்கல்பட்டை அடுத்த செட்டிபுண்ணியம் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர் 400 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த செட்டிபுண்ணியம் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோர் 400 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. காஞ்சிபுரம் மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கவுஸ் பாஷா முன்னிலை வகித்தார். இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு ஏழைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக மாவட்ட பிரதிநிதி சி.ஆர். குணசேகரன் வரவேற்றார். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News