செய்திகள்
தற்கொலை

எலச்சிபாளையம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-05-27 14:57 GMT   |   Update On 2020-05-27 14:57 GMT
எலச்சிபாளையம் அருகே குடும்ப தகராறு காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
எலச்சிபாளையம்:

எலச்சிபாளையம் அருகே மூலப்பாளையத்தை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் மகள சவுந்தரி (வயது 35). இவருக்கு மல்லசமுத்திரத்தை சேர்ந்த ரிக் வண்டி நிறுவன மேலாளர் ரவிக்குமார் என்பவருடன் திருமணமாகி 10 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். சவுந்தரி கடந்த 6 ஆண்டுகளாக தந்தை வீட்டில் வசித்து வந்தார். அவரது கணவர் அடிக்கடி அங்கு வந்து செல்வாராம்.

இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் சவுந்தரி வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த எலச்சிபாளையம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News