செய்திகள்
வழக்கு பதிவு

தேனி அருகே கோஷ்டி மோதல்- 8 பேர் மீது வழக்கு

Published On 2020-05-27 13:47 GMT   |   Update On 2020-05-27 13:47 GMT
தேனி அருகே கோஷ்டி மோதலில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அல்லிநகரம்:

தேனி அருகே உள்ள அன்னஞ்சியை சேர்ந்தவர் ஷியாம் (வயது 18). சம்பவத்தன்று இவருக்கும், தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கவியரசன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கவியரசன் உள்பட 4 பேர், ஷியாமிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல், கவியரசனை, ஷியாம் உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து இருதரப்பிலும் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஷியாம் அளித்த புகாரின் பேரில், கவியரசன், சிலம்பரசன் உள்பட 4 பேர் மீதும், கவியரசன் அளித்த புகாரின் பேரில் ஷியாம், கபிலன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News