செய்திகள்
சூளைமேட்டில் வீட்டுக்குள் இறந்த முதிய தம்பதிக்கு கொரோனா இல்லை
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதிக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சென்னை:
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்தவர்கள் தகவல் அளித்ததையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதியான ஜீவன்-தீபாவின் உடல்களை மீட்ட போலீசார், கொரோனா பாதிப்பால் இருவரும் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் ஜீவன்- தீபா தம்பதிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்தவர்கள் தகவல் அளித்ததையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதியான ஜீவன்-தீபாவின் உடல்களை மீட்ட போலீசார், கொரோனா பாதிப்பால் இருவரும் இறந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து நடைபெற்ற பரிசோதனையில் ஜீவன்- தீபா தம்பதிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.