செய்திகள்
நந்தம்பாக்கத்தில் ராணுவ வீரர் கொரோனாவுக்கு பலி
நந்தம்பாக்கத்தில் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ராணுவ வீரர் கொரோனா தொற்றால் பலியானார்.
சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறை அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் வேளச்சேரி பகுதியில் வசித்து வந்த முன்னாள் ராணுவவீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவர் வசித்து வந்த பகுதி சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. போலீசார், தீயணைப்பு துறையினர், வருவாய் துறை அதிகாரிகள், டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி உள்ளது. இந்த நிலையில் வேளச்சேரி பகுதியில் வசித்து வந்த முன்னாள் ராணுவவீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நள்ளிரவில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவர் வசித்து வந்த பகுதி சுகாதாரத் துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.