திருமங்கலத்தில் வேலை இல்லாததால் விஷம் குடித்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் பசும்பொன் வீதியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மகன் விஜயகுமார் (வயது 31).
விஜயகுமார் முதுநிலை என்ஜினீயரிங் படித்துவிட்டு ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இன்னும் திருமணம் ஆகாத நிலையில், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வேலை எதுவுமின்றி வீட்டில் இருந்துவந்தார்.
இதனால் கடும் விரக்தியடைந்த விஜயகுமார், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை குடித்து விட்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஜயகுமாரை உறவினர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாண்டி கொடுத்த புகாரின் பேரில் திருமங்கலம் சப்- இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொரோனா ஊரடங்கால் வேலையிழந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.