செய்திகள்
கொரோனா வைரஸ்

நெல்லையில் மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-05-26 05:51 GMT   |   Update On 2020-05-26 05:51 GMT
நெல்லையில் இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 329ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை:

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,082 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,731 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 118-ஆக உள்ளது.
 
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 548 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 11,131 ஆக அதிகரித்துள்ளது. 5,135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 297 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 329 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை 99 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

Similar News