செய்திகள்
விபத்து பலி

போளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- வாலிபர் பலி

Published On 2020-05-25 13:20 GMT   |   Update On 2020-05-25 13:20 GMT
போளூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:

போளூரை அடுத்த ஆர்.குண்ணத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு. இவருடைய மகன் பிரபு (வயது 25), மெக்கானிக். இவர், போளூரில் இருந்து ஆர்.குண்ணத்தூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். புறவழிச்சாலையில் உள்ள கோவில் அருகே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த செங்குணம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் முருகபாண்டி (24) என்பவரது மோட்டார் சைக்கிள் மீது பிரபு ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பிரபு வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரபு உயிரிழந்தார். இதுகுறித்து போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News