செய்திகள்
ஒரத்தநாடு அருகே முதியவர் கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது
ஒரத்தநாடு அருகே முதியவர் கொலை வழக்கில் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
ஒரத்தநாடு:
ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் சங்கரநாதன் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் திருமேனி (வயது 62). விவசாயி. இவர் கடந்த மாதம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நள்ளிரவு போர் செட்டுக்கு சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொலை செய்யப்பட்ட திருமேனியின் உறவினர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த புகாரின் பேரில் போலீசார் மறு விசாரணை செய்ததில் சங்கரநாதன்குடிகாட்டை சேர்ந்த குழந்தைவேல் (55), சாமிநாதன்(30) ஆகிய 2 பேரை கைது செய்து ஒரத்தநாடு நீதிபதி வேலுமயில் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் சங்கரநாதன் குடிகாடு பகுதியை சேர்ந்தவர் திருமேனி (வயது 62). விவசாயி. இவர் கடந்த மாதம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நள்ளிரவு போர் செட்டுக்கு சென்ற போது மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொலை செய்யப்பட்ட திருமேனியின் உறவினர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த புகாரின் பேரில் போலீசார் மறு விசாரணை செய்ததில் சங்கரநாதன்குடிகாட்டை சேர்ந்த குழந்தைவேல் (55), சாமிநாதன்(30) ஆகிய 2 பேரை கைது செய்து ஒரத்தநாடு நீதிபதி வேலுமயில் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.