செய்திகள்
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 6 பேர் கைது
ராமநாதபுரம் அருகே மதுவிற்ற 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதன்படி நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மதுவிற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 121 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.