செய்திகள்
போளூர் அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போளூர்:
போளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு மருத்துவமனை அருகில் பணம் வைத்து சூதாடிய போளூரை சேர்ந்த அருண்குமார் (வயது 21), நடராஜ் (24), குமரன் (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.