செய்திகள்
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் வசூல்
வெள்ளகோவில் நகராட்சியில் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
வெள்ளகோவில்:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அரசு ஏராளமான கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் ஆணையாளர் டி.சசிகலா பொதுமக்கள், கடைகளில் முறையான விதிமுறைகள் பின்பற்ற படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்ட போது முக கவசம் மற்றும் தடை உத்தரவு விதி மீறியதற்காக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் விதித்துள்ளார்.