செய்திகள்
தனிமைப்படுத்துதல்

கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கை- 141 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Published On 2020-05-23 08:49 GMT   |   Update On 2020-05-23 08:49 GMT
வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வெள்ளகோவில் பகுதிக்கு வந்த 141 பேரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
வெள்ளகோவில்:

கொரோனா வைரஸ் நோய் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வெள்ளகோவில் பகுதிக்கு வந்த 141 பேரை 14 நாட்களுக்கு தனிமைபடுத்தியுள்ளனர்.

5 பேரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் வைத்து பரிசோதித்து வருகின்றனர். இந்த 5 பேரை மருத்துவமனையில் 7 நாட்களுக்கும், வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்த உள்ளனர். தனிமைப்படுத்தபட்ட நபர்கள் யாரேனும் வீட்டை விட்டு வெளியே வந்தால் அருகில் உள்ளவர்கள் சுகாதாரத்துறை, காவல் துறை, வருவாய் துறை, நகராட்சி அலுவலகத்தில் தகவல் கொடுக்க வேண்டுமாறு வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News