செய்திகள்
தற்கொலை

திருவாரூர் அருகே பெண் தற்கொலை

Published On 2020-05-20 14:04 GMT   |   Update On 2020-05-20 14:04 GMT
திருவாரூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் உஷா (வயது33). இவருடைய கணவர் பிரபாகரன், தஞ்சை மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

பிரபாகரன் குவைத்தில் வேலை பார்த்து வருவதால் உஷா தனது குழந்தைகளுடன் ஆதிரங்கத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று உஷா தனது கணவருடன் தொலைபேசியில் பேசி விட்டு வீட்டு மாடியில் உள்ள அறைக்கு சென்று விட்டார். அவர் நீண்ட நேரமாகியும் கீழே வரவில்லை. இதனால் அவருடைய பெற்றோர் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது உஷா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உஷாவின் உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உஷா ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News