செய்திகள்
நாகரசம்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
நாகரசம்பட்டி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
நாகரசம்பட்டி அருகே உள்ள மொரசப்பட்டியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் ரஜினி (44). உறவினர்கள். அவர்களுக்குள் நில தகராறு இருந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் புவனேஸ்வரி தாக்கப்பட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினி, ராஜீவ்காந்தி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.