செய்திகள்
கோப்புப்படம்

குடிபோதையில் தகராறு பால் வியாபாரியை வெட்டிய கும்பல்

Published On 2020-05-20 12:04 GMT   |   Update On 2020-05-20 12:04 GMT
திண்டுக்கல் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே வீரக்கல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது27). பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், பாண்டியராஜ், பாண்டி, சீமைச்சாமி ஆகியோருடன் மது அருந்த சென்றார். குடிபோதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் கத்தி மற்றும் அரிவாளால் பாலசுப்பிரமணியை சரமாரியமாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணி ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News