செய்திகள்
யானை

சூளகிரி அருகே ஊருக்குள் புகுந்து 2 யானைகள் அட்டகாசம்

Published On 2020-05-20 11:31 GMT   |   Update On 2020-05-20 11:31 GMT
சூளகிரி அருகே யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
சூளகிரி:

கர்நாடக மாநில வனப்பகுதியிலிருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 காட்டு யானைகள் கும்பளம், பெத்தசிகரலபள்ளி, ராமன்தொட்டி வழியாக சூளகிரி பகுதிக்கு வந்தன.

பின்னர் அந்த 2 யானைகளும், சூளகிரி அருகே எலசேபள்ளி கிராமத்திற்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த தக்காளி பயிர்களை கால்களால் மிதித்து நாசம் செய்தன. யானைகள் கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

மேலும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு சென்று அந்த 2 யானைகளையும், அருகில் உள்ள ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணியை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News