செய்திகள்
தாக்குதல்

நாமக்கல்லில் எல்.ஐ.சி. முகவர் மீது தாக்குதல்- 2 பேர் கைது

Published On 2020-05-20 11:12 GMT   |   Update On 2020-05-20 11:12 GMT
நாமக்கல்லில் எல்.ஐ.சி. முகவர் மீது தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 38). எல்.ஐ.சி. முகவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மளிகை கடைக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது நாமக்கல் பட்டறைமேடு பகுதியில் வாலிபர்கள் சிலர் தகராறு செய்து கொண்டு இருந்தனர்.

அதை தங்கவேல் தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் கட்டையால் தங்கவேலை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த தங்கவேல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கணேசபுரத்தை சேர்ந்த கண்ணன் (25), அண்ணாநகரை சேர்ந்த பரணிதரன் (24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News