செய்திகள்
வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கு மீறல்: நெல்லை மாவட்டத்தில் 4,271 வாகனங்கள் பறிமுதல்

Published On 2020-05-19 12:51 GMT   |   Update On 2020-05-19 12:51 GMT
நெல்லை புறநகர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 6,347 பேர் மீது 4,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவோரை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நெல்லை புறநகர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 6,347 பேர் மீது 4,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களிடம் இருந்து 4,271 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News