செய்திகள்
செய்யாறில் 25 ஆயிரம் பேருக்கு கபசுர குடிநீர்
செய்யாறில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு தன்னார்வலர்கள் குழு சார்பில் 25 ஆயிரம் நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வினியோகம் செய்தனர்.
செய்யாறு:
செய்யாறு பஸ் நிலையம், காய்கறி மார்க்கெட், ஆரணி கூட்டு சாலை பகுதிகளிலும் திருவத்தூர், வெங்கட்ராயன்பேட்டை, மற்றும் சுற்றுபுற கிராம பகுதிகளான உக்கம் பெரும்பாக்கம், கல்லேரி, நாவல், கழனிபாக்கம், வாழ்குடை, பாராசூர், கீழாத்தூர், மோட்டூர், கடுகனூர், விநாயகபுரம், தென்தண்டலம், புரிசை உள்ளிட்ட கிராம பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்களுக்கு அரசு பரிந்துரைத்த கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தன்னார்வலர் குழு ஒருங்கிணைப்பாளர் நடராஜன், தன்னார்வலர்கள் வெங்கடேசன், ரவி, துரை, ராஜாபாதர் புருஷோத்தமன், சுரேஷ்குமார், சுனில், துரைசாமி, ஆனந்தன், சிவசீதரன், விஜயராசு, பரமசிவன், தனுஷ், துளசி, மாலினி, கணேஷ், தேவதர்ஷினி, உள்ளிட்டோர் விநியோகம் செய்தனர்.