செய்திகள்
தடையை மீறி டீ விற்ற 4 பேர் மீது வழக்கு
தாரமங்கலம் அருகே தடையை மீறி டீ விற்ற 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகே பவளத்தானூரை சேர்ந்தவர்கள் சித்தையன் (வயது 48), சீனிவாசன் (22), பழனியப்பன் (29), பையூரை சேர்ந்த ரமேஷ் (21) ஆகியோர் ஊரடங்கில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிகநேரம் தடையை மீறி டீ விற்றதாக தெரிகிறது.
இதுகுறித்து தாரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் விசாரணை நடத்தி 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.