செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

Published On 2020-05-18 07:15 GMT   |   Update On 2020-05-18 07:15 GMT
விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் முதலமைச்சர் பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், “விவசாயிகளுக்கு மானியம் தரும் முடிவை தமிழக அரசிடமே விட்டு விட வேண்டும். மாநில அரசு கடன் பெறுவதற்கான நிபந்தனைகளை ரத்து செய்ய வேண்டும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News