செய்திகள்
தமிழக அரசு

மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும்- தமிழக அரசு

Published On 2020-05-15 09:57 GMT   |   Update On 2020-05-15 09:57 GMT
வரும் திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

• மே 18-ந்தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்

• வாரத்தின் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படும்.

• ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

• அலுவலக பணிக்கு வராத பணியாளர்கள் மின்னணு முறையில் அலுவலகத்துடன் இணைந்திருக்க வேண்டும்.

• அரசு ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக பேருந்து வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News