செய்திகள்
மீனவர் உயிரிழப்பு

கூடங்குளம் அருகே படகுக்கு அடியில் சிக்கி மீனவர் உயிரிழப்பு

Published On 2020-05-14 14:11 GMT   |   Update On 2020-05-14 14:11 GMT
கூடங்குளம் அருகே படகுக்கு அடியில் சிக்கி மீனவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
வடக்கன்குளம்:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை அடுத்த பழவூர் அருகே உள்ள லெவிஞ்சிபுரம் ஈத்தன்காடு பகுதியை சேர்ந்தவர் ராயப்பன். அவருடைய மகன் ராஜா (வயது 49). மீனவரான இவர் வழக்கம்போல் நேற்று காலையில் கூட்டப்புளியை சேர்ந்த 4 மீனவர்களுடன் கடலுக்கு நாட்டு படகில் மீன்பிடிக்க சென்று உள்ளார்.

கடலில் மீன்பிடித்து விட்டு மாலையில் கரைக்கு மீனவர்கள் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது கரையில் படகை நிறுத்துவதற்காக இறங்கி உள்ளார். அப்போது வேகமாக அடித்த கடல் அலையினால் படகு திசைமாறி திரும்பியது.

இதில் படகுக்கு அடியில் ராஜா சிக்கி காயத்துடன் மூச்சுத்திணறி தண்ணீருக்குள் மூழ்கினார். உடனே சக மீனவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கூடங்குளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் அந்த பகுதி மீனவர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News