செய்திகள்
கைது

கடையம் அருகே கள் விற்ற 2 பேர் கைது

Published On 2020-05-12 14:09 GMT   |   Update On 2020-05-12 14:09 GMT
கடையம் அருகே கள் விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கள்ளை பறிமுதல் செய்தனர்.
கடையம்:

கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பேராமணியை சேர்ந்தவர் கல்யாணி (வயது 50). இவர் தனது வீட்டில் வைத்து கள் விற்றுக்கொண்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கல்யாணியை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மானூர் அருகே உள்ள சாலைப்புதூரை சேர்ந்த நாராயணன் (49) என்பவர் அங்குள்ள தோட்டத்தில் வைத்து கள் விற்றதாக மானூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News