செய்திகள்
மாயம்

தஞ்சையில் இளம்பெண் மாயம்

Published On 2020-05-10 12:41 GMT   |   Update On 2020-05-10 12:41 GMT
தஞ்சையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:

தஞ்சை பூக்காரத்தெருவை சேர்ந்தவர் வீரையன். இவரது மகள் ரஞ்சிதா (வயது 30). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பின் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ரஞ்சிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து தஞ்சை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரஞ்சிதாவை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News