செய்திகள்
கமல்ஹாசன்

சத்தியம் வெல்லும் என்பதை நிரூபித்திருக்கிறது ஐகோர்ட்டு தீர்ப்பு - கமல்ஹாசன்

Published On 2020-05-08 21:22 GMT   |   Update On 2020-05-08 21:22 GMT
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட ஐகோர்ட்டு தீர்ப்பு தொடர்பாக டுவிட்டரில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஊரடங்கு உத்தரவு முடியும்வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட ஐகோர்ட் தீர்ப்பு தொடர்பாக டுவிட்டரில் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கமல்ஹாசன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும், சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு. மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. மக்கள் நீதி மய்யம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி என பதிவிட்டுள்ளார். 
Tags:    

Similar News